என் வாழ்க்கையின்
அர்த்தத்தை உணர்த்தியவளே
உன்னால் என் மனதில்
ஆசை காட்டி வளர்த்த
இந்த புதிய உறவு ...
என்மீது நீ வைத்த
ஆழமான அன்பு
என்னுள் காதல் பயிரை
வளர்த்துவிட்டதடி..!
உன்னை பார்த்த
என் கண்களின் சந்தோஷம்...
நீ என்னுடன் பேசிய
அந்த சில நொடிகள்...
என் உயிரினில்
ஆழமாய் பதிந்ததடி..!
கனவில் மலரும்
என் காதல் நினைவுகள் கூட
நிஜமானது உன்னால்...
உறக்கத்தை பறி கொடுத்து
உறவுகள் சிதறடித்து
மலர்ந்த இந்த உண்மை காதலால்..!
பிறந்தேன் மறுபடியும்
உன்னிடத்தில்
காதல் ஏக்கங்களோடு...
என் வாழ்வில்
இத்தனை சுகங்களும்
உன்னால் தானடி...!
இவையெல்லாம் தந்த
உன் இனிய உறவு
எனக்கு உயிரல்லவா...
உன் உறவை பிரியும் தருணத்தில்
என் உயிரும் பிரியும் அவ்விடத்தில்...
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++