JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Friday, March 18, 2011

எனது படைப்புக்களில் இதுவும் ஒன்று




என் நெஞ்சின் வலிகளை உணர முடியாத உன்னால் எனது எண்ணங்களை மட்டும் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்.

Thursday, March 17, 2011

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இராட்சத விலங்குகளின் எச்சங்கள்

உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசரஸ் கருதப்படுகின்றது. அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் எச்சங்கள், சுவடுகள் மற்றும் கண்டெடுக்கப்பட்டுள்ள எழும்புக் கூடு என்பவற்றின் அடிப்படையில் முகப்பெரியதாக அது கருதப்படுகின்றது. அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன. அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது. 
1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு 




இப்பாம்பானது அனெகொண்டாவைப் போன்ற உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும். இவை சுமார் 60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளதுடன் சுமார் 42 அடி நீளமும், 1,135 கிலோ நிறையும் கொண்டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
2. எருமை உருவ கொறிணி (Rodent) 



கொறிணி எனப்படுவது அணில் போன்ற விலங்கினமாகும். உருகுவே நாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 53 சென்ரி மீற்றர் உயரமுடைய 1000 கிலோ நிறையுடைய கொறிணியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இவை இற்றைக்கு சுமார் 2- 4 மில்லியன் வருடங்களுக்கு முதல் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. 
3. மடகஸ்காரில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தவளை 



உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப்பெரியதாக கருதப்படும் பிரமாண்ட தவலை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகஸ்கார் நாட்டில் கண்டுபிடித்தனர். இது 41 சென்றி மீற்றர் உயரமும், 4.5 கிலோ கிராம் நிறையும் கொண்டிருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
4. பெரு நாட்டில் வாழ்ந்த பிரமாண்ட பென்குயின்கள் 



தென் அமெரிக்காவில் சுமார் 35 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கூறப்படும் பிரமாண்ட பென்குயின்களே இவை. இவற்றின் சுவடுகள் பெருவுன் அடகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உயரம் சுமார் 1.5 மீற்றர்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
5. மனிதனை விட பெரிய கடல் தேள் 



மனிதனைவிட பெரியதும் சுமார் 8.2 அடி உயரமானதும் சுமார் 390 மில்லியன் வருடங்கள் பழமையானதுமான கடல் தேளின் எச்சங்கள் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. 
இவை அக்காலப்பகுதியில் கடலில் வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
6. வரலாற்றுக்கு முற்பட்ட கங்காருகள் 



அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இவ்வகை 7-10 அடி வரையான உயரத்தினை கொண்ட கங்காருகள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். _

Wednesday, March 16, 2011

அடுத்தது கலிபோர்னியா?

சிபிக் பெருங்கடலை சூழ்ந்துள்ள அந்த குதிரைக் குளம்பு வடிவ பெரும் பகுதியை ”பசிபிக் ரிங் ஆப் பயர்” (Pacific Ring of Fire) என்கின்றார்கள். நிலநடுக்க அபாயங்களும் எரிமலை அபாயங்களும் நிறைந்த கடல் எல்லைப்பகுதி அது. உலகின் 75 சதவீத எரிமலைகள் இப்பகுதியில் தான் அமைந்துள்ளனவென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நெருப்பு வட்டத்தின் தென் கிழக்கு பகுதியில் சிலியும் தென் மேற்கு பகுதியில் நியூசிலாந்தும் வட மேற்கு பகுதியில் ஜப்பானும் அமைந்துள்ளது. இந்த மூன்று மூலைகளிலும் சமீப நாட்களில் தான் மாபெரும் பூகம்பங்கள் நிகழ்ந்தன. மிச்சமிருக்கும் நான்காவது மூலையான வட கிழக்கு பகுதியில் கலிபோர்னியா உள்ளது. இங்கு பேரழிவு தரும் பூமிஅதிர்ச்சி வருமா என்பது கேள்வி அல்ல, எப்போது வரும் என்பது தான் நிஜக் கேள்வி என்கின்றார்கள்.

டுத்தது சூப்பர் மூன். சில சமயங்களில் நிலவுப் பெண்னானவள் ஏதோ ஆசையில் பூமிக்கு மிக அருகில் வருவதுண்டு. இந்த முறை கிட்டமாக 221,567 மைல்கள் வரைக்கும் வருகின்றாள். இதை சூப்பர் மூன் என்கின்றார்கள். 1955,1974,1992 மற்றும் 2005-லும் இப்படி நெருங்கி வந்திருக்கின்றாள். வந்த போதெல்லாம் பூமியில் பேரழிவு தான். 2005 சுப்பர் மூனுக்கு இருவார முன்பு இந்தோனேசிய பூகம்பமும் அதைத் தொடர்ந்து மாபெரும் சுனாமியும் ஆசியாவை விழுங்கியது. இந்த மாதம் 19-ம் தேதி சூப்பர் மூன் வரவிருக்க இரு வாரங்களுக்கு முன் ஜப்பானின் பாதி செத்திருக்கின்றது. ஆனால் சூப்பர் மூனுக்கும்-பூமிஅதிர்ச்சிகளுக்கும் சம்பந்தமில்லை என விஞ்ஞானிகள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். சந்திரனின் நகர்வுக்கேற்ப கடல் மட்டங்கள் ஏறி இறங்குவது சகஜம். இதை ஓதங்கள் அதாவது tides என்பார்கள். இதற்கு இந்தியாவில் அலிபா கடற்கோட்டை நீரில் மூழ்கி எழுவது அப்பட்ட சாட்சி.(படம்:Alibag, Maharashtra).



டுத்தது கதிர் வீச்சு பற்றி கொஞசம். ஜப்பானில் கசியும் கதிர் வீச்சு எந்நேரமும் கலிபோர்னியா கடற்கரை பக்கம் வந்து சேரலாம் என தகவல் கசிய அமெரிக்க மேற்கு கரை பகுதிகளில் ”பொட்டாசியம் அயோடைடு” பார்மசி ஸ்டோர்களில் விற்று தீர்ந்திருக்கின்றது. பீதியில் பெட்ரோல் விலை என்ன, யாரும் சீண்டாத பொட்டாசியம் அயோடைடுக்கே இப்போது தட்டுப்பாடு. கதிர்வீச்சை சீவெர்ட்ஸ் (Sieverts) என்ற அலகினால் அளக்கின்றனர்.அதாவது mSv-மில்லிசீவெர்ட்ஸ் (Milli sieverts). வருடத்துக்கு நம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு கதிர்வீச்சு 3mSv/year. ஒரு முறை CT ஸ்கேன் செய்தாலே 3mSv உங்களுக்கு வந்து விடும். எக்ஸ்ரேயின் போது கதிர்வீச்சு கொஞ்சம் கம்மி 0.1mSv. ஆனால் ஜப்பானில் இப்போது வெளியாகும் அளவு 400mSv/hour. கொஞ்சம் டேஞ்சர் தான். மண்ணிலிருந்து நாம் பிரித்தெடுத்த மாணிக்கங்களே - சீசியம், அயோடின், ஸ்ட்ரோண்டியம், புளூட்டோனியம்-கள் விஷமாகின்றன.

நீங்களும் மூவி செய்யலாம்

உங்களுக்கு கணினி கீபோர்டில் தட்டத்தெரிந்தால் போதும். உங்களால் ஒரு கார்டூன் மூவியையே உருவாக்க முடியும் என்கின்றது இந்த தளம் xtranormal.com. IF YOU CAN TYPE,YOU CAN MAKE MOVIES என்பது தான் அவர்கள் கோஷம். TEXT-TO-MOVIE என்கின்றார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள் இனி ஓடுபடங்களை எளிதாக உருவாக்கி யூடியூபில் ஏற்றி மகிழலாம். அதிகம் பேர் பார்வையிட்டால் யூடியூப் வேறு உங்களுக்கு காசு கொடுக்கின்றேன்என்கின்றது பின்னே எதற்கு வெயிட்டிங். ஒரு நிமிடம். உங்கள் வேலை மட்டும் பறிபோகாமல் பார்த்துக்கொள்ளவும். இப்படித்தான் பெஸ்ட்பை அங்காடியில் வேலை பார்த்த ஒரு நபர் iPhone4 vs HTC Evo என்ற கீழ்கண்ட வீடியோவை உருவாக்கி யூடியூபில் வெளியிட இரண்டே வாரத்தில் சூப்பர் ஹிட்டாக 3,847,381 பேர் பார்வையிட்டிருக்கின்றார்கள். ஏதோ கடுப்பில் பெஸ்ட்பை அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டது.வாழ்க ஜனநாயகம்.
http://www.youtube.com/watch?v=FL7yD-0pqZg


வெளிநாடுகளில் வேலை தேடுவோர்கள் வசதிக்காக அவர்கள் ஏமாந்து போகாமல் இருக்க ஃபிராடு கம்பெனிகளின் பெயர்களை இந்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் தான் இந்த மாதிரி ஃபிராடுகள் அநேகம் பேர் இருக்கின்றார்களாம். நீங்களும் உஷாராக இருக்க அந்த கோப்புக்கான சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்.
http://www.moia.gov.in/writereaddata/pdf/PAC_LIST.pdf

இன்னொரு சுனாமி?



நண்பர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நமது விவாதகளத்தில்குறிப்பிட்ட செய்தி ஒன்று அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்பதால் இங்கு அதை பதிவாக பதிவு செய்கின்றேன். நன்றி முஹம்மது இஸ்மாயீல். ஹ.

மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு October 13, 2008
மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன. கடலுக்கடியில் பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.
1. http://www.paristamil.com/tamilnews/?p=15315
2. http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/
3. http://www.ajeevan.ch/content/view/6565/11/
30 Oct 2008
03:33 PM IST
மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமே உணர முடியும். ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த http://www.petquake.org என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.
இந்தியதட்டைப்பற்றிய விக்கிபீடியாவின் பக்கம்.
http://en.wikipedia.org/wiki/Indian_Plate
என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) என்னுடைய +919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் "ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யின் (http://www.ina.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவேன். அதன் பிறகு "இறைவன் நாடினால்" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும் அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும் அந்த "உயிர்" என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில் மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே?
உங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன "இறைவன் நாடினால்" ? இதற்கான விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் மனிதர்களால் போடப்பட்டிருக்கும் ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில் தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால் மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும் தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து விட்டோம். வேறன்ன செய்ய ?
சுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art - Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின் சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும். அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம் செய்த்தோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரெ விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை விட அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.
இதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே, இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும் இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண் உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில் வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம். இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.

நம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதிய சேவை.


நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் எந்த இடத்தில்
இருக்கிறது இதன் பணி என்ன என்பதை நம் கூகிள் மருத்துவ
நிபுனர்களுடன் சேர்ந்து புதிதாக ஒன்றை ஆரம்பித்துள்ளது, நம்
உடலைப்பற்றிய அனைத்து தகவல்களையும் முப்பரிமானத்தில்
தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
திரைப்படத்தில் கிராபிக்ஸ்-ல் மட்டும் தான் மனித உடலை
பார்த்திருக்கிறோம் என்று எண்ணும் நமக்கு கூகிள் முப்பரிமானத்திலே
மனித உடலை காட்டி வியக்க வைக்கிறது. தலை முதல் கால் பாதம்
நம் உடலில் எந்த இடத்தைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமோ
அதை சொடுக்கினால் போதும் உடனடியாக நாம் தேர்ந்தெடுத்த
பகுதியின் தகவல்களை நமக்கு காட்டுகிறது. ஆய்வகத்தில் சென்று
தான் மனித உடலின் எலும்புக்கூடு -ஐ பார்த்திருக்கிறோம் என்றும்
சொல்லும் நமக்கு கூகிள் இணையம் மூலம் மனித உடலை
முப்பரிமானத்தில் காட்டுவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
இணையதள முகவரி : http://bodybrowser.googlelabs.com/body.html
புகைப்பிடிப்பதால் நம் உடலில் ஏற்படும் பாதிப்பையும் சேர்த்து
காட்டினால் அதனால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து பல நபர்கள்
திருந்துவார்கள் என்பது நம் எண்ணம். மருத்துவ துறையில்
இருப்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் நம் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
                                                        சிந்தனை
                   மனதின் வெளிப்பாடு தான் நம் முகம் , நல்ல
       எண்ணங்களையே எப்போதும் எண்ணுங்கள்.



பெயர் : தாதாசாஹெப் பால்கே,
மறைந்த தேதி : பிப்ரவரி 16, 1944
தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும்
துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind
Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக
கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில்
பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை
உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே
இயக்கவும் செய்தார்.வருடைய நினைவாக தாதாசாஹெப்பால்கே விருது நிறுவப்பட்டது.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை பாடல் வரிகளுடன் கொடுக்கும் தளம்.


ஆங்கிலவீடியோ பாடல்களை லிரிக்ஸ் (Lyrics) -உடன் கேட்டால்
நன்றாக இருக்கும் என்று எண்ணும் நமக்கு இந்தப்பதிவு
பயனுள்ளதாக இருக்கப்போகிறது, ஆம் ஆங்கிலவீடியோ
பாடல்களை லிரிக்ஸ் உடன் தேடிக்கொடுக்க ஒரு தளம்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
யூடியுப்-ல் வீடியோக்களை தேடி கொடுக்க பல தளங்கள்
இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் சற்று
வித்தியாசமானது தான், ஆங்கில வீடியோ பாடல்களை
யூடியுப்-ல் சென்று தேடினால் லிரிக்ஸ் கிடைக்காதே
என்று இனி எண்ண வேண்டாம் யூடியுப் -ல் இருக்கும்
ஆங்கில பாடலகளை லிரிக்ஸ் உடன் கொடுத்து நமக்கு
உதவ ஒரு தளம் இருக்கிறது.
இணையதள முகவரி :  http://tubeoke.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் பாடலின் பெயர் அல்லது இசையமைப்பாளரின்
பெயர் கொடுத்து தேட வேண்டியது தான், உடனடியாக நாம்
கொடுத்த தேடலுக்கு பொருத்தமான வீடியோ வரும் இதை
சொடுக்கி வீடியோ பாடலுடன் லிரிக்ஸ்-ம் சேர்ந்து வரும். சில
ஆங்கில வீடியோ பாடல்களின் லிரிக்ஸ் தேடும் அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

நாம் உருவாக்கிய Ebook, Tutorial, Mp3 -ஐ ஆன்லைன் மூலம் விற்கலாம்.




நாம் உருவாக்கும் டூட்டோரியல் முதல் இசை, இபுத்தகம்,
புகைப்படங்கள் வரை அனைத்தையுமே ஆன்லைன் மூலம்
எளிதாக உலக அளவில் விற்கலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
படம் 1
ஆங்கிலம் அல்லது தமிழில் நன்றாக கதை, கவிதை, கட்டுரை
எழுதும் திறமை இருக்கிறது ஆனால் இதை எப்படி விற்பது என்று
தெரியாமல் இருக்கும் நாம் இதை ஒரு இபுத்தகமாக மாற்றி
ஆன்லைன் மூலம் எளிதாக விற்கலாம், விற்பதற்கு நமக்கு
உதவி செய்ய ஒரு ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.uploadnsell.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் எடுத்த புகைப்படங்கள் முதல் நாம்
உருவாக்கிய இபுத்தகம், இசை,டூட்டோரியல் வரை அனைத்தையுமே
உலக அளவில் விற்கலாம். படம் 1-ல் காட்டியபடி Choose File என்ற
பொத்தானை சொடுக்கி நாம் விற்க விரும்புக் கோப்பை தேர்வு
செய்ய வேண்டும் அடுத்து  Product Information என்பதில் நாம்
விற்கும் பொருளின் பெயர் மற்றும் விலையை தேர்ந்தெடுக்க
வேண்டும் , மூன்றாவதாக Seller’s Information உங்களைப்பற்றிய
தகவல்களையும் உங்கள் Paypal இமெயில் முகவரியையும்
கொடுத்து , நான்கவதாக சட்டப்படி வேறு யாருடைய பொருளையும்
விற்கவில்லை என்பதற்கு அடையாளமாக Agreement -ஐ டிக்
செய்து விட்டு Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும்
அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தகவல்களை வைத்து
ஒரு இணையப்பக்கம் உருவாக்கப்பட்டு அதன் இணையதள
முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் இதை நம் பிளாக் அல்லது
இமெயில் மூலம் நமக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பலாம்
வாங்க விருப்பம் உள்ளவர்கள் இத்தளம் மூலமாகவே பேபால்
வழியாக பணம் செலுத்தி நாம் கொடுத்த பொருளை வாங்கிக்
கொள்ளலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நாம் எடுத்த Photos,
நாம் உருவாக்கிய Ebook,Tutorial,Music போன்றவற்றை
எளிதாக விற்க உதவும்.

ஆன்லைன் மூலம் நாம் வரைந்த ஒவியத்தை விற்று பணம் சம்பாதிக்கலாம்.

நாமும் பிக்காஸோ மாதிரி உயிர் உள்ள ஒவியம் வரைந்து மில்லியன் டாலர் பணத்தை குவிக்கலாம்.

உங்கள் பழைய மொபைல்-ஐ நல்ல விலைக்கு விற்கலாம்.

வீடு முதல் அலுவலகம் வரை என்னவெல்லம் தேவையான பொருட்கள் என்பதை சொல்லும் பயனுள்ள தளம்.




ஒரு அழகான வீட்டிற்கு அல்லது அலுவலகத்துக்கு என்ன
பொருட்கள் எல்லாம் தேவை, எந்தெந்த நிறுவனங்கள் அந்த
பொருளை உருவாக்குகின்றன என்பதைப் பற்றிய முழுத்
தகவல்களையும் நமக்கு சொல்ல ஒரு தளம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புதிதாக ஒரு வீடு வாங்கி குடியேற இருக்கிறோம் என்னென்ன
பொருட்கள் எல்லாம் அத்தியாவசிய தேவை எந்தெந்த
பொருட்கள் இருந்தால் வீடு அழகாகக இருக்கும், முன்னனியில்
இருக்கும் பொருட்களின் நிறுவனங்கள் என்னென்ன இப்படி
பலதரப்பட்ட தகவல்களையும் நமக்கு சொல்லி இந்தத்தளம்
உதவுகிறது.
இணையதள முகவரி : http://householdproducts.nlm.nih.gov
வீட்டிற்கு தேவையான பொருட்களை தனித்தனி வகையாக பிரித்து
கொடுத்து நம் தேடும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. டூத் பிரஷ் முதல்
வீட்டில் மாட்டும் படம் வரை இருசக்கர வாகனம் முதல் நான்கு
சக்கரவாகனம் வைத்திருப்பவர்கள் வரை என்னவெல்லாம் கொண்டு
செல்லவேண்டும், எந்த பொருட்கள் எந்த நிறுவனத்தில் தரமானதாக
கிடைக்கும் அதிகமான மக்கள் எந்த நிறுவனத்தின் பொருட்களை
வாங்குகின்றனர் என்ற அனைத்து தகவல்களும் நமக்கு நொடியில்
கிடைக்கும். இதே போல் அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற
வேண்டும் என்றால் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான
பொருட்களையும் பட்டியலிட்டு காட்டுகிறது இந்ததளம். அடிக்கடி
மறதி ஏற்படும் நம் நண்பர்களுக்கும் வீட்டை அழகுபடுத்த
நினைப்பவர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

என் காதல்


என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை.
அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே.
அது போதாதென்று சிங்கள நண்பர்கள் என்னையும் இனோக்காவையும் ஒன்றாகக் கண்டதும் “ஆகா… அப்பிடியா விசயம் போகுது” என்று சத்தமிட்டது…. நினைத்து மீண்டும் ஒரு தடவை புன்முறுவல் பூத்துக்கொண்டேன்.
காலை கதிரவன் தன் கதிர்களை பரப்பி என் முதுகில் சூடு போடும் வரையில் நித்திரை கலையாத எனக்கு இன்று காலை நான்கு மணிக்கே விழப்பு வந்து விட்டது. ம்… எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கட கட வென காலைக் கடன்களை முடித்து காலை 6.45 க்கே வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் புறப்பட்டு விட்டேன்.
போகும் வழியில் எப்பிடி இந்த அழகுப் பிசாசு என் வாழ்வில் வந்து நர்த்தனம் ஆடத்தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தேன்.
நான் படிப்பது விஞ்ஞாண பீடத்தில் அவள் கற்பது முகாமைத்துவ பீடத்தில். பல்கலைக்கழக டோஸ்ட் மாஸ்டர் கிளப்பில்தான் அவளின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒருவரில் ஒருவர் அதிக உரிமை எடுக்க தொடங்கிவிட்டோம். உச்சக்கட்டமாக நேற்று தர்மாலோக ஹோலில் எல்லார் முன்னிலையிலும் என்னோடு ரெம்ப நெருக்கமாக உட்கார்ந்து விட்டாள். விசயம் கிசு கிசு என காட்டுத் தீ போல எனது டிப்பார்ட்மென்ட் முழுவதும் பரவிவிட்டது.
சுகததாஸ ஸ்டேடியம் பின் பக்கத்தில் உள்ள அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருக்கின்றேன்.
தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த, கடவத்த, கடவத்த…. பஸ் நடத்துனர்கள் கூவிக்கொண்டு இருந்தனர். முதலாவது இரண்டாவது மூண்றாவது பஸ்சும் போய்விட்டது. மனது மிகவும் குளப்பமாக இருந்தது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
இன்றைக்கு கம்பஸ் போவதா? வேண்டாமா? போனால் அவளைக் கட்டாயம் சந்திக்க வேண்டுமே?
போகாவிட்டால் பாவம் அவள் டிபார்ட்மென்ட் வாசலில் காத்துக்கொண்டு நிற்பாளே எனக்காக?
இன்னும் குளப்பம் தீரவில்லை. கீழ் உதட்டை மேவாய் பற்களால் அழுத்தியவாறு கண்களை மூடிப் பார்த்தேன் ஏதாவது முடிவு தெரிகின்றதா என்று!!!!
தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த………..
மீண்டும் ஒரு தடவை இன்னுமொரு பஸ் வந்து விட்டது. சரி இப்ப முதலில பஸ்சில ஏறுவம் பேற வழியில என்ன செய்வது என்டு முடிவு செய்வம். பஸ்சில் ஏறிக்கொண்டேன்
“தம்பி எங்க?” சிங்களத்தில் கேட்டான் நடத்துனர்
“கம்பஸ் எக்கெனாய்” (கம்பஸ் ஒருவர்) சிங்களத்திலேயே பதில் கூறினேன்.
சட்டைப் பையில் இருந்து 12 ரூபாயை கணக்காக எடுத்து அவனிடம் கொடுத்தேன். இல்லாவிட்டால் என்ன மாத்தின காசு இல்லையா என்று வழமை போல பிளேடு போடுவான். டிக்கட் ஒன்றை கிழித்து கையில் திணித்து விட்டு
“இஸ்சரா சல்லி கண்ண” (முன்னே இருப்பவர்களே பணத்தை தாருங்கள்) கூவிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்தான்.
வழமைபொல சாலை நெருக்கடி. பஸ் வண்டி நின்று நின்று அரங்கி அரங்கிச் சென்று கொண்டு இருந்தது. வழமையாக ஐந்து நிமிடத்தில் வந்து விடும் பாலிய கொட சந்தியை இன்று 10 நிமிடத்தில வந்து சேர்ந்தது.
பஸ் நின்றதும் இன்னுமொரு தொகுதி கூட்டம் பஸ்சினுள் அடைபடத்தொடங்கியது. எனக்கு பக்த்தில் ஒரு ஆசனம் ஒருவரும் இல்லாமல் இருந்தது.
“ஹலோ மச்சான்!” இப்ப எனக்கு பக்கத்து ஆசனத்திலிருந்து ஒரு குரல்
“ஆ… ரொமேஸ்” என்னுடன் படிக்கும் சிங்கள நண்பன் ஒருவன்.
இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் சம்பாசனை தொடங்கியது
“என்னப்பா நீ நாங்களெல்லாம் எதிர்பார்க்காத காரியத்தில இறங்கிட்டாய். நீ இப்பிடி காதலில விழுவாயெண்டு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கேல” நக்கலாக கூறினான் அவன்
“டேய்! உங்களுக்கு என்ன விசராடா?. அப்பிடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல”.
“ஓ………! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாமத்தான் நேற்று தர்மாலோக ஹோலில அவளோட கதைச்சுக்கொண்டு இருந்தனியாக்கும்”
“ஏனடா! கம்பஸ்ல ஒரு பெட்டையோட கதைச்சா அதுக்குப் பெயர் காதலா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டேன்.
“நாங்களெல்லாம் எவ்வளவு கதைச்சும் அவள் எங்களோட அவ்வளவு கதைக்கேலயே?. உன்னோட தானே ஒட்டிக்கொண்டு இருந்தவள். நீயும் தானே முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி வழிஞ்சு வழிஞ்சு கதைச்சுக்கொண்டு இருந்தனி”
“ரொமெஸ் ஏன் தேவையில்லாத கதையிப்ப?”
“டேய்! டேய்! மனசுக்குள்ள ஆசையை வைச்சுக்கொண்டு மனதுக்கு துரொகம் செய்யாதடா…. எல்லா தமிழ் பொடியங்கள் மாதிரி நீயும் உனக்கு நீயே வேலி போட முயற்சிக்கிறாய்! சரியா?”
“இல்ல மச்சான்……..”
“சரி சரி! இப்ப நீ சொல்லு அவளில உனக்கு விருப்பமில்லையா? அவளுக்கு என்ன குறைச்சல் நல்ல வடிவுதானே? அவள் சிங்களம் எதிர்காலம் கஷ்டம் எண்டு மட்டும் யோசிக்காத. நாங்க ஃபுல் சப்போட்ட தருவம்”
“டேய்… இருந்தாலும் என்ற அப்பா அம்மாவுக்கு என்ன… பதில்….”
“நீ என்ன அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடவா போறாய்? அவையள் இத புரிஞ்சு கொள்ளுவினம். காதலிக்கிறது ஒண்டும் தப்பில்லையே! மற்றது நீ ஒண்டும குட்டி பபா இல்லையே! அம்மா அப்பா என்டு திரிய”
குளம்பி இருந்த குட்டையை நல்லா குளப்பி விட்டான். ஆனால் பாவம் அவன் அதில மீன் பிடிக்க மட்டும் முயலவில்லை. ஏதோ எனக்கு உதவி செய்ய முயலுகின்றான் என்று மட்டும் தெரிந்தது.
“ரொமேஸ்…. இண்டைக்கு காலையில டிப்பார்ட்மென்ட் வாசலில நிக்கிறதா சொன்னவள்டா! தனக்கு கடைசி முடிவை இண்டைக்கு சொல்லோனும் எண்டும் சொன்னவள்டா!”
“அதுக்கென்ன இப்ப? ஏன்தான் இப்பிடி பயந்து சாகிறியோ தெரியாது??” சலித்துக்கொண்டான்.
“அதில்ல மச்சான்….. சரி… நான் எனக்கும் சம்மதம் எண்டு சொல்லுறன்…”
“நான் சொல்லுறன் எண்டு சொல்லாத. நீ விரும்பிறாய் தானே அவள?” நெற்றியை சுருக்கியவாறே கேட்டான்.
“ஓம்!”
“எலகிரி மச்சான்!” அவன் முகத்தில் சந்தோசப் புன்னகை. அட என்முகத்திலும் தான்.
பஸ் கம்பஸ் வாசலில் வந்து நின்றது. நானும் ரொமேசும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினோம்.
“மச்சான் சொதப்பிடாத!!!!. நான் பின்னால வாறன் ஏதும் ஹெல்ப் எண்டா உடனே கூப்பிடு” கண்களை அகல விரித்தவாறு மிகவும் உற்சாகமாய் கூறினான்.
கம்பஸ் வாசலில் இருந்து நடக்க தொடங்கினேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் டிப்பார்ட்மென்டை அடைந்து விடுவேன்.
தூரத்தில் அவள் நிற்பது தெரிந்தது. வெள்ளை நிற ஸ்கேட்டும் பிளவுசும் போட்டு அழகான தேவதைபோல இருந்தாள். எனக்கு வாய் நிறைய கொள்ளை சிரிப்பு ஆனால் நெஞ்சு மட்டும் படக் படக் என்று அடித்துக்கொண்டது.
“மம ஒயாட ஆதரேய்…..” (சிங்களத்தில் நான் உன்னைக் காதலிக்கின்றேன்) ஒரு தடவை எனக்குள் கூறிப்பார்த்துக் கொண்டேன்.
இதே வேளை எனது டிப்பார்ட்மென்ட் பெட்டையள் இரண்டு பேர் என்னையும் இனோக்காவையும் பார்த்து விட்டு “குட் லக்……..!” எனச் சத்தமாக கூறி சிரித்துக் கொண்டு சென்றனர்.
மேலும் இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் எனது செல்லிடத் தொலைபேசி சிணுங்கத் தொடங்கியது. எரிச்சலுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன் அம்மா கோலிங்…. சி.எல்.ஐ காட்டியது!!
உடனே தொலைபேசிக்கு பதில் அளித்தேன். மறு முனையில் அம்மா.
“தம்பி! நீ கேட்டனியெல்லே பி.சி.எஸ் பரீட்சைக்கு 30,000 ரூபா வேணும் எண்டு. நான் என்னோட வேலை செய்யிற ஜெயமாலாட்ட கடனா அந்தக்காச வேண்டி உண்ட கணக்கில பாங்கில போட்டிட்டன். காசை எடுத்து பரீட்சை காசைக் கட்டு. நீ படிக்க வேணும் அதுதான் எங்களுங்கு முக்கியம். உன்ன நம்பி இருக்கிற அந்த பொம்பிளப் பிள்ளயள மறந்திடாத”
“ஏன் அம்மா! நான் இங்க யாராவது சிங்களப் பெட்டைய பாத்திடுவன் எண்டு பயந்திட்டீங்களோ?” புன்னைகையுடன் கூறிவிட்டு அம்மா பதில் அளிக்க முன்னரே தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.
சில அடி முன்னுக்கு இனோக்கா நின்று கொண்டு இருந்தாள். நான் பேசியது அவளிற்கு விளங்காது காரணம் அவளிற்கு சத்தியமாகத் தமிழ் தெரியாது.
கிட்ட நெருங்கியதும் அதே வழமையான உள்ளம் கொள்ளைகொள்ளும் புன்னகையுடன் கண்களை அகல விரித்து இமைகளை மேலே உயர்த்தி என்ன பதில் என்று கண்களாலே கேட்டாள். அவளிடம் கடும் நம்பிக்கை இருப்பதை அவள் நின்ற நிலை காட்டியது. கொஞ்சமும் படபடப்பில்லாம் நின்ற கொண்டுடிருந்தாள்.
“ஐம் சாரி இனோக்கா”
“வட்?” சில நாழிகைகள் அதிர்ச்சியில் நின்றிருந்தாள். பிறகு கண்களை மெல்ல புறங்கையால் தடவியவாறு அவ்விடத்தில் இருந்து கட கட என நடக்கத் தொடங்கினாள்.
“இனோக்கா….வெய்ட்…!!!” எதையும் கேட்கும் நிலையில் அவள் இப்போ இல்லை.
பின்னே திரும்பிப் பார்த்தேன் ரொமேஸ் தனது தலையை இது உருப்படாத பயல் என்று பொருள்படும் வண்ணம் ஆட்டியவாறு என்னைக் கடந்து டிப்பார்ட்மென்ட்டுக்குள் சென்று கொண்டு இருந்தான்.

Tuesday, March 15, 2011

Facebook: புதிய மின்னஞ்சல் கணக்கை துவங்க.




சமூக இணைதளமான Facebook தனது Email சேவையை துவங்குவது பலரும் அறிந்ததே. இந்த மின்னஞ்சல் சேவை Facebook ஐ பொருத்தமட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால், நம்மால் நேரடியாக yourname@facebook.com என துவங்க இயலாது. முன்பு ஜிமெயில், ஆர்குட் போன்ற கணக்குகளுக்கு Invitation வசதி இருந்தது அனைவருக்கும் நினைவிலிருக்கலாம். அந்த வசதியை ஃபேஸ்புக்கும் வழங்கியிருக்கிறது. 

இந்த Invitation ஐ நீங்கள் பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம். உங்களுக்கு விருப்பமான பெயரில் (மற்றவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக) Facebook இல் மின்னஞ்சல் கணக்கை உருவாக்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Facebook இல் எற்கனவே id இல்லாதவர்கள் இங்கே க்ளிக் செய்து (http://www.facebook.com/username/) திறக்கும் திரையில் நீங்கள் விரும்பும் id ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.


உங்கள் Facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள், இந்த இடுகையின் இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து Facebook இன் New Messages பகுதிக்கு செல்லுங்கள்.


அங்கு வலது புறமுள்ள Request an Invitation பொத்தானை சொடுக்குங்கள்.

அடுத்த திரையில் You will receive as Invite soon எனும் செய்தி வந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி Invitation உங்களுக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.

Firefox: இணையத்தில் வேகமாக பணிபுரிய...


நாம் இணையத்தில் உலாவும்பொழுது, வழக்கமாக அட்ரஸ் பாரில் வலைபக்க முகவரியை டைப் செய்யும் பொழுது, www.sitename.com என்பது போன்று, www. மற்றும் .com, .org, .net என முழு முகவரியையும் டைப் செய்வதுண்டு, சிலர் .com இற்கு பதிலாக வலைப்பக்கத்தின் பெயரை மட்டும் டைப் செய்து Ctrl+Enter கொடுப்பதுண்டு. (gmail என டைப் செய்து Ctrl+Enter கொடுக்கும் பொழுது www.gmail.com என Prefix மற்றும் Suffix ஐ அதுவாகவே நிரப்பிக் கொள்ளும்) இது பலரும் அறிந்த ஒன்று.

ஆனால், நாம் அடிக்கடி உலாவும் வலைப்பக்கங்கள், .com மட்டுமின்றி .net, .org, .co.in என பலதும் இருப்பதுண்டு. இவற்றிற்கான ஷார்ட்கட் கீகளை நெருப்புநரி உலாவியில் உருவாக்க ஒரு எளிய நீட்சி URL Suffix. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த நீட்சியை தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு, Tools மெனுவிற்கு சென்று, Add-ons ஐ க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது திறக்கும் சிறு திரையில், URL Suffix பகுதியில் உள்ள Options பொத்தானை சொடுக்கவும்.


அடுத்து திறக்கும் வசனப்பெட்டியில், கொடுக்கப்பட்டுள்ள ஷார்ட்கட் கீகளுக்கு தேவையான Prefix மற்றும் Suffix ஐ நம்முடையை வசதிக்கு ஏற்ப கொடுத்து, OK பொத்தானை சொடுக்குங்கள்.


அவ்வளவுதான், இனி இந்த கீகளை நினைவில் வைத்துக் கொண்டு, விரைவாக இணையத்தில் பணிபுரிய இயலும்.