காற்றலையில் வந்த உன்குரல் கேட்டு,
நான் கண்ணுறக்கம் தொலைத்து விட்டேன்
நேற்று வரை குயிலோசை ரசித்த மனதுக்கு,
இன்றுமுதல் உன்குரலே இசையாகிவிட்டதுவே
காற்று கூட அறிந்திடாத உன்குரல் மாற்றத்தை,
என் மனம் கணநொடியில் புரிந்து கொண்டதுவே
தோற்றங்கள் தொலைவில் இருந்தாலும்,
குரல் மாற்றங்களை மனது அறிந்து கொள்ளுமே
அழைப்பது எதுவோ நீயாகிலும்,
என்னை அடைவது உந்தன் குரலோசை தானே
உதடுகள் போலி வார்த்தையை உச்சரித்தாலும்,
என் உள்ளத்தில் உறைவது உன் உண்மை மட்டுமே..
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Tuesday, August 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment