Monday, August 29, 2011
நான் உன்னை அழ விட மாட்டேன் என்று
உனக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன்,
ஆனால் உன் வேதனை எனக்கு புரிகிறது,
கண்ணீர் விட்டு அழுது மனதை தளர விடாதே ....
உனக்காக நான் எதை வேண்டுமானாலும் தருகிறேன்...
ஒரு அரவணைப்பு, ஒரு அன்பு முத்தம்..
ஆனால் எதையும் மறைக்காதே என்னிடம் நீ...
நீ அழுவதை என்னால் தாங்க முடிய வில்லை...
உன்னை ஒரு முறையாவது காதலில் கட்டி அனைக்க விடு....
உன்னை பெருமை படுத்த எதை வேண்டுமானாலும் செய்கிறேன்...
உனக்காக உயரமான மலை ஏறவா? உன் பெயரை சத்தம் போட்டு சொல்லவா?
ஆனாலும் உன்னை அழவைத்து சமாதனபடுத்துகையில் ஒரு சந்தோஷம்..
ப்ளீஸ் அன்பே என்னை வெறுத்து விடாதே ..
உன் அருகிலேயே இருக்க விரும்புகிறேன்.. இப்படியே உன்
கண்ணீரை துடைத்து உன்னை சமதானப்படுத்த ...
நீ என்னை வெறுப்பது தெரிந்தால் .. ஒன்றும் சொல்லாதே ..உன் கண்களை மூடிக்கொள்...
உதட்டோரம் ஒரு அன்பான முத்தம் கொடுத்துவிட்டு போய் விடுகிறேன் கண் காணமல்....
என்னை விட்டு போய் விடுவாயோ என்ற பயத்தில்
நான் உன்னிடம் இப்படி சில்மிஷங்கள் செய்கிறேன்..
என்னை உன் கண்களில் வைத்து கொள்ளாதே.. உன் இதயத்தில் மறைத்து விடு...
ஏனெனில் உன் ஒவ்வொரு இதய துடிப்பும் உன்னக்காக
ஒருத்தி இருக்கிறான் என்று நினைவூட்டும்..
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment