ஆசைகள் என்னை தீண்டியதில்லை
எதிர்பார்ப்புகளை விரும்பியதில்லை
கனவுகளில் விழுந்ததில்லை
தனிமையில் சிரித்ததில்லை
பெண்னே உன்னை காணும் வரையில்....
குளிரும் உன் பார்வையில் - என்
வாழ்வின் அர்த்தம் உன்னில் கண்டேன்
என் உயிரின் காதலே
மெல்லியதான உன் புன்னகையும்..
இனிவான உன் வார்த்தைகளும்
கனிவான உன் காதலும்
பெண்மைக்கு அர்த்தங்கள் கூறும்
அத்தனையும் உன்னிடத்தில்...
அசந்துதான் போனேன்
உன் முதல் தரிசனத்தில்....
இதயத்தின் துடிப்புகள் அதிகரிக்கின்றன
என் தேவதை உனக்காக...
ஆசைகளும் அதிகரிக்கின
எதிர்பார்புகளும் நீள்கின்றன
வஞ்சி உன் கரம் பிடித்து
வாழ்க்கை என்னும் பந்தத்தில் இணைய...
+++** என்றும்அன்புடன்+++**Santhosh**+++
No comments:
Post a Comment