Tuesday, August 30, 2011
பாடும் புல்லாங்குழல் ஒன்று
ஊமை யாவதேன்
இந்தக் குழலுக்குள்
இன்னும்
பூபாளம் இருக்கிறது
மரணிக்க வில்லை இது
மரணம் வென்றது
வசை பாடும் வலியோரே
தேய்ந்த குழல் அல்லவே
தென்றலில் லாடும்
அந்த கீற்றினை கேளுங்கள்
இவன் பாடும் ராகங்களை
அது அறியும்
அழியாத ராகங்கள் எத்தனையோ
இந்தக் குழலுக்குள்ளே
தாள நயங்களோடு
நூல் வேலிக்குள் நின்று
மெளன ராகம்
இசைத்துக்கொண்டே இருக்கிறது
+++என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment