இவ் உலகில் என்னையறிந்து
அன்பெனும் சிறகினை தந்து
உறவெனும் உரிமை தந்து
உயரப்பறக்க வைத்தாய்
உல்லாசமாய் ரசித்து சிலிர்க்கையிலே
அன்பெனும் சிறகினை
அடிமையென ஆயுதங் கொண்டு
வெட்டியே சரிக்கின்றாய்
சிறகினை தந்து பறிப்பது நியாயமா?
குடும்பமாய் கூடு கட்டி
வாழ்ந்திட ஆசைகொண்டேன்
மரமான உன்னை தாக்கியது யாரோ-ஆனால்
கூட்டை தாக்கியது நியே...!
விதியா இல்லை சதியா தெரியவில்லை
கூடு இழந்து தவிக்கும் என் சிறகினை
மீ்ண்டும் மீண்டும் பறிக்கின்றாய்....!
பறக்க தான் நினைக்கின்றேன்
மரமாய் என்னை தாங்கும்
உன்னை விட்டு பறப்பதற்காய் அல்ல
உன் உணர்வுகளை மதிக்கும்
ஓர் பறவையாய்.....!
அன்பெனும் அமுதத்துடன்
செளிர்ப்பாய் இருந்த உன் உள்ளம்
அடிமையெனும் விசம் கலக்க பட்டு
பட்டமரமாய் உன் உள்ளம்...
விசத்தனை கக்கி அன்பெனும் அமுதத்தை விழுங்கி
மீண்டும் செழித்து வளந்திடு
மீண்டும் உன்னில் கூடு கட்டி
உறவாடிட உதவிடு
சிறகொடிந்த பறவையாய் காத்திருப்பேன்
உனக்காக அல்ல
நீ தரும் அன்பெனும் சிறகுக்காய்......
+++என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Tuesday, August 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment