காத்திருந்து காத்திருந்து
காலங்கள் கரைந்த
ஏக்கங்களுகம் அதிகரித்த
நாடி நரம்புகள் துடிக்க
அவளின் வருகைக்காய் வகுப்பறையில்
காத்திருந்த - அக் கணப்பொழுதுகள்
இன்று நினைக்கையில்
இனிமையான நினைவுகள்
வலியுடன் கலந்து
புதுவித உணர்வுகளை - என்னுள்
பிறப்பிக்கின்றன இன்னும்....
நட்பில் வளர்ந்த காதல்
வீரியம் கொண்டு வளர்கையில்
என் இதயம் அகற்றி
இன்னொரு இதயம் சுமக்கையில்
பல ஆயிரம் நட்சத்திரங்களில்
நானும் ஒன்றையாய்
பிரகாசித்த தருணங்கள்
இன்றும் இனிக்கின்றன.
என்னுடன் பேசும்போது
சிணுக்கிடும் அவள்
செல்லமாய் எனை அழைப்தாய்
இன்றும் ஓர் பிரமை
என்னைச் சுற்றி....
விடியாத இரவுகளில்
முடிவுறாத அவள் நினைவுகள்
இளமையின் துடிப்பில்
வெட்கப்படும் மனசு
பசுமையான நினைவுகள்
இன்றும் படர்கின்றன என்னில்.
No comments:
Post a Comment