Tuesday, August 30, 2011
அன்பே உன் வதனமலர்வில்
அகிலம் மறக்கின்றேன்
ஆதாரமற்ற வாழ்வில்
உனையடைந்து மகிழ்கின்றேன்
உன்னாசை தீர்த்திட
உயிராய் நானிருப்பேன்
உத்தமனாய் வலம்வந்து
ஊடலோடு கலந்திடுவேன்
நீ போதும் இவ்வுலகில்
உன்அன்பில் உயிர் வாழ்ந்து
மடியும்வரை உனக்காவே
முழுவதுமாய் சேர்ந்திடுவேன்
அழகே உன்கரம்பற்றி
அதிகாரம் உனக்களித்ததால்
உயிர்பிரிப்பதற்கும் உன்னிடமே
அனுமதிக்காய் காத்திருப்பேன்
+++என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment