JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Wednesday, October 30, 2013


கொஞ்சம் கூட வெக்கம் இல்லாதது என் மனது..!!
நீ என்னை நினைப்பதே இல்லை..!!!
என் மனம் உன்னையே நினைக்கிறது..!!!


Saturday, February 18, 2012

என்ன தவம் செய்தன...?





நீ உறங்கிப்போன இரவுகள்
விழித்துக்கொள்ள நினைக்குமோ..?
அல்லது நீ விழித்தபின்தான்
அவைகள் உறங்கிட நினைக்குமோ.?















என்ன தவம் செய்தன அவைகள்
உன்னுடனேயே ஒட்டி உறாவாடுகிறது

விலகிய தலையணையையும்
ஒதுங்கிக் கொண்ட போர்வையையும்
இரவுகள்தான் மூடிக்கொள்கிறதே...

வெளிச்சத்தை வெறுத்து
இருளை அழைத்தேன் நான்
ஆனால் அந்த இரவோ
உன்னை அணைத்துக்கொண்டது
ஒரு போர்வைக்குள்
ஒழிகின்ற கனவுகள்
இரவுக்குச் சொந்தம்
அந்த இரவுகள் உன்னோடு
சொந்தம் கொண்டாடும் போது
கனவுகளும் கானலாகிவிடுகிறது.

Tuesday, September 20, 2011

உன்னிடம் மட்டும்
ஏன் இந்ந பாசம்
என்ன பந்தமிது
நீ அருகிலிருக்கும் போது
எல்லாம் பிடிக்கிறதே
எந்தன் எல்லாமும் நீயாய்
எப்படி ஆனாய்
எப்போது என்னை - உன்
உயிராக்கிக் கொண்டாய்
வரம் தானடா நீ
என் வாழ்கையில் வந்ததால்
உணர்கின்றேன் இப்போது
எந்தன் உலகமே நீயென்று

அறியேன் நான் - நம்
அன்பின் ஆழம் ஏதென்று
ஆனாலும் அறிவேன்
ஒவ்வொரு ஆரம்பத்திற்கும்
ஒரு முடிவு உண்டு.


Friday, September 2, 2011

என் மனதை கொள்ளையிட்டவளே 
என் வாழ்க்கையின் 
அர்த்தத்தை உணர்த்தியவளே 

உன்னால் என் மனதில் 
ஆசை காட்டி வளர்த்த 
இந்த புதிய உறவு ... 
என்மீது நீ வைத்த 
ஆழமான அன்பு 
என்னுள் காதல் பயிரை 
வளர்த்துவிட்டதடி..! 

உன்னை பார்த்த 
என் கண்களின் சந்தோஷம்... 
நீ என்னுடன் பேசிய 
அந்த சில நொடிகள்... 
என் உயிரினில் 
ஆழமாய் பதிந்ததடி..! 

கனவில் மலரும் 
என் காதல் நினைவுகள் கூட 
நிஜமானது உன்னால்... 
உறக்கத்தை பறி கொடுத்து 
உறவுகள் சிதறடித்து 
மலர்ந்த இந்த உண்மை காதலால்..! 

பிறந்தேன் மறுபடியும் 
உன்னிடத்தில் 
காதல் ஏக்கங்களோடு... 
என் வாழ்வில் 
இத்தனை சுகங்களும் 
உன்னால் தானடி...! 

இவையெல்லாம் தந்த 
உன் இனிய உறவு 
எனக்கு உயிரல்லவா... 
உன் உறவை பிரியும் தருணத்தில் 
என் உயிரும் பிரியும் அவ்விடத்தில்...



+++** என்றும்ன்புடன்+++**Santhosh**+++

Thursday, September 1, 2011

தெரியாத போது
ஆசைப்பட்டு அணைத்த என்னை
தெரிந்த போதுதெருவில் உதறி விட்டாய்
உறவாக நீ பேசிய வார்த்தைகளில்
உலகமே நீதான் என்றுமனம் மகிழ்ந்தேன் 
அன்றுஎன் உயிரே என்னைஉதறிய போது
உணர்வுகளை ஊமையாக்கி மரணித்துக் கொண்டிருக்கிறேன் 
இன்றுநீ பேசிய வார்த்தைகளைகவிதைகளாக சுவாசித்து
நீ எழுதிய கடிதத்தைஎன் கல்வெட்டாக படித்துப் பார்க்கிறேன்
மனதிற்க்கு வலி தந்தாலும்என் இனிய உறவாக இதயத்தில்
நினைத்துக் கொண்டிருக்கின்ற உன்னைஒரு போதும் வெறுக்க 
முயர்ச்சிக்க மாட்டேன்.

+++** என்றும்ன்புடன்+++**Santhosh**+++
முடிவு தெரியாத
நம் காதல் பயணத்தில்
மௌனம் சாதிக்கும்
உன் பெண்மை
விலக நினைத்தாலும்
விடைபெற முடியாத
உன் நினைவுகள்
பிரிய நினைத்தாலும்
மீண்டும் பார்க்கத் தூண்டும்
உன் புன்னகை பூத்த முகம்
சண்டை பிடித்தாலும்
சரணடையச் செய்யும்
உன் அன்பு
கண் கலங்கினாலும்
ஆறுதல் சொல்லும்
உன் பாசம்
அன்பே இது தானா
நம் உண்மைக் காதல் ......
 



+++** என்றும்ன்புடன்+++**Santhosh**+++