Friday, August 26, 2011
உன்னை அன்று
பார்க்காது இருந்திருந்தால்
உன்னோடு அப்போது
பேசாது விட்டிருந்தால்
எம் உள்ளங்கள் இடம் மாற
இறுமாப்புச்செய்திருந்தால்
உணர்வுகள் ஒன்றையொன்று
புரியாது போயிருந்தால்
பார்வைகளால் பாசமதை
பரிமாற மறுத்திருந்தால்
காமன் கணைகள்அவை
வலுவிழந்து வீழ்ந்திருக்கும்
காதலர் தினமேஎன்றும்
களையிழந்து போயிருக்கும்
கண்களுக்குள் எம்காதல்
கருச்சிதைவு அடைந்திருக்கும்
காலமெல்லாம் கண்ணீர்தான்
காவியமாய் ஆயிருக்கும்
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment