அன்பே !
மழைக்கால குடைக் காளானாக...
உன் மனம் இருப்பது புரியாமல்-
நான் உன் இதயவறையில் குடியேற விரும்பி,
இமைமூடி உன் நினைவுகளை
இதமாக
இரைமீட்டுக்கொண்டிருந்த வேளையில்,
நீயோஎன் அன்புக்கு இறுதியுரையை
இரக்கமின்றி எழுதிவிட்டுச்செல்ல
நானோ
உன் பாதச்சுவடுகளில் -என்
பார்வையைப் பதித்தபடியே பயணிக்கின்றேன்
எனக்கானஉன் இறுதி வரியை எதிர்பார்த்து..
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Friday, August 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment