எனக்கு விக்கல் வரும் போது
நீ என்னை நினைப்பதாய் நினைக்கிறேன்,
தனிமை சிரிப்பு, தனிமை பொலம்பல் என
தினமொரு நாடகம் இனிமையாய் அரகேற்றினேன்,
உன் நினைவுகளை நினைக்கையில்
திறந்தவாய் மூடாமல் இருக்கிறேன்,
நீ அணியும் ஆடைகளை என்
மேனி கொண்டு நெய்கிறேன்,
உன் மெத்தை மடி சாய்கிறேன் ,
வெக்கத்தில் உன் இமை கொடுக்கும் தாளத்திற்கு
இதயம் பக்கத்தில் பாடல் வடிக்கிறேன்,
என் உதடுகளால் உன் மேனியை நகல் எடுக்கிறேன்,
என் விழிகளிலே அதை மாட்டி வைக்கிறேன்,
உன்னை தள்ளிவைத்தே ரசிக்கிறேன்,
மனதை கள்ளிச்செடியில் புதைக்கிறேன்,
உன்னுடன் பேசிய வார்த்தைகளை சேகரிக்கிறேன்,
நீ கேட்கும் பாடல்களை ரசிக்கிறேன்,
மடல் ஒன்றை எடுக்கிறேன்,
ஊடல் கொஞ்சத்தை சேர்க்கிறேன்,
விளையாடல் மஞ்சத்தில் கலக்கிறேன்,
தேடல் தீரும் வரை தொடர்வதற்கு....
என்றும்அன்புடன்+++**Santhosh**+++
Friday, August 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment