எதையும் தாங்கும் இதயம் ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்
மெழுகு போன்று உதிர்ந்த விம்பம்
கண்ணிமைகளின் பாரத்தில்
அழுத்தும் நிமிடங்கள்
என்னிடம் தோன்றாத
மாற்றங்கள் எத்தனையோ
பேச நினைக்கும் நேரத்தில்
முறிந்து போகும்
தோழமை உறவுகள் எத்தனையோ
எதிர்பார்ப்புக்கள் ஏதும்
தோன்றாத வேளையில்
கை கொடுக்கும்
வெற்றிக் கனவுகள்
இப்படி எத்தனையோ
உணர்வுகள் என்னிடத்தில்
பகிந்து கொள்ள முடியாத
நினைவுகள் எத்தனையோ-ஆனால்
நீ என்னிடத்தில் இல்லை
இப்போது என்னவேலோ எப்போதோ
இந்த கவிதையினை
நீ கையில் எடுத்து படிக்கும் போது
தம்மால் நினைத்துக் கொள் என்னை?
ஒரு துளி கண்ணீரில்
நிறைந்து இருப்பேன்
காற்றில் அது கலையும் முன்
என் நினைவுகள்
உன்னுள் கலந்து இருக்கும்
என்பதை நீ ஒப்பு கொள்வீரா
அதுதான் உண்மை நீ அறிந்து கொள்
உன் பிரிவின் வலியை தாங்க முடியாமல்
உன்னை சந்திக்கும் நாளுக்காக
நான் இரவு பகலாய்
தவம் கிடக்கின்றேன் நீ அறிவாயா?
சந்தித்து பிரியும் போதுதான்
தோன்றும் வேதனையின் சுகம்
அதை நீ அறிவீரா?
பழகி விட்ட பாச வலியை
தாங்க முடியாமல்
வேதனையில் தவிக்கின்றேன்
அம்பு பட்டு துளைத்தால்
புண் தீர்ந்து விடும்
எனக்கு பட்டதோ அன்பு
சொல்லத் துடிக்கின்றேன்
கருணை என்ற ஒன்று
உனக்கு இருந்தால்
இந்த பிரிவினை
இன்றே மாற்றி விடு
இப்பிறவியில் இல்லை என்றால்
எப்பிறவியிலும் நீயும் தேவை இல்லை
எனது வார்த்தைகள்
விம்பம் போன்று
உயிர் ஊட்ட முடியாத
வார்த்தைகள் எத்தனையோ
எனக்குள் செத்து கிடக்கின்றது
அது எனக்குள் சமாதியாகட்டும்
Saturday, July 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment