நிகழ்காலம் நெருப்பாய் சுட்டு விட
எதிர்காலம் கவலையில் கலங்கி விட
அனாதையாய் பல நாட்கள்
தனிமையில் சிதைந்து விட
ஆதரவாய் ஆறுதல் வார்த்தைகள் பேசி
என் கிறுக்கல்களையும் ரசித்து
என் உயிர் மூச்சில் கலந்து
இன்றும் என்னை நேசித்து
என் துயர் மாறா செய்யும் என் உறவே..
என் நட்பு தோட்டத்துக்குள்
வந்து போகும் பறவையே
உன் நட்பில் துயர் மறைக்கிறேன்
உன் சிரிப்பில்
என் கண்ணீரை மறைக்கிறேன்
துயர் துடைக்கும் உன் கரங்களுக்கு ஆயிரம் முத்தங்கள்
என் உறவே
எனக்கு மட்டும்
உன் அன்பை தந்து விடு
பாசத்தை பகிர்ந்து தருவது அன்னையாக
மட்டுமே இருந்து போகட்டும்
உன் பாசம் எனக்கே எனக்கு மட்டுமே வேண்டும்..........
No comments:
Post a Comment