பூவாய் மலரும்
உளி கொடுத்த வலியில்
சிலையும் சிரிக்கும்
வலி இல்லா வாழ்க்கை
வையத்தில் இல்லை
கலி என்றில்லை இது
காலத்தின் உண்மை
மனதின் வலியில்
மனது மலருமா?
பிரிவின் வலியில்
உறவு தொடருமா?
தனிமை வலியில்
இனிமை வருமா?
மரண வலிதனில்
ஜனனம் பிறக்குமா?
மனது மலருமா?
பிரிவின் வலியில்
உறவு தொடருமா?
தனிமை வலியில்
இனிமை வருமா?
மரண வலிதனில்
ஜனனம் பிறக்குமா?
வலியின் விளைவு
வல்லதே ஆனாலும்
வலியே வாழ்வானால்
வாழ்வதெங்கணம்???
வலிக்கு வல்லமை
தந்த இறைவனவன்
வலி தாங்கும் இதயம்
மட்டும் தர மறந்ததேன்??
வல்லதே ஆனாலும்
வலியே வாழ்வானால்
வாழ்வதெங்கணம்???
வலிக்கு வல்லமை
தந்த இறைவனவன்
வலி தாங்கும் இதயம்
மட்டும் தர மறந்ததேன்??
வலிக்கு வாழ்க்கைப் பட்ட
நிழல் தேடும் நெஞ்சங்கள்
வலிந்து வரும் துயரதை
வாழ்நெறி என உணருமோ ?
இல்லை வலியுணரா மரணம்
வரக் காத்திருக்குமோ??
நிழல் தேடும் நெஞ்சங்கள்
வலிந்து வரும் துயரதை
வாழ்நெறி என உணருமோ ?
இல்லை வலியுணரா மரணம்
வரக் காத்திருக்குமோ??
வலிக்கு வலி வரும் நேரம்
இறைவனும் உணர்வானா அதை?
வழிந்தோடும் கண்ணீர் மாற்ற
விரைந்தோடி வருவானா ?நினை
இறைவனும் உணர்வானா அதை?
வழிந்தோடும் கண்ணீர் மாற்ற
விரைந்தோடி வருவானா ?நினை
No comments:
Post a Comment